காத்தான்குடி பிரிவிலுள்ள வெள்ள அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்கெவன 100 சுகாதார பொதிகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவின் நிருவாகத்தினரிடம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் வசந்தராசா நேற்று (10-01-2011) திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப தலைவர் அப்துல்லா காத்தான்குடி பிரிவின் தலைவர் றாபி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு இப்பொதிகள் வழங்கப்படவுள்ளன.
மாவட்டத்தின் பிரதேச ரீதியாகவுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரிவுகளினூடாக இச்சுகாதார பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
Filed under: kattankudy