SRI LANKA RED CROSS SOCIETY KATTANKUDY DIVISION

www.slrcskkydivision.com

இலங்கை செஞ்சிலுவச் சங்கத்தின் காத்தான்குடிப் பிரிவு வழங்கிய வெள்ள நிவாரண உதவி (இரண்டாம் கட்டம்)

காத்தான்குடியில் வெள்ளத்தினால் முற்றாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரடியாகச் சென்று திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இலங்கை செஞ்சிலுவச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் அனுசரனையுடன் இலங்கை செஞ்சிலுவச் சங்கத்தின் காத்தான்குடிப் பிரிவு இன்று (08.02.2011) வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர்உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது. காத்தான்குடி கிளையின் அலுவலகத்தில் வைத்து இந்நிவாரன பொருட்கள் வழங்கப்பட்டன. பெட்சீட், பாய், உடு துணிகள் என்பன இதன்போது வழங்கப்பட்டன.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் உபதலைவர் அல்ஹாஜ் அப்துல்லாஹ் காத்தான்குடிப் பிரிவின் தலைவர் சகோதரர் றாபி மற்றும் பிரின் அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்ட இந்த உலர்உணவு விநியோகத்தில் 100 குடும்பங்களைச் சேந்ர்தவர்கள் பொதிகளைப் பெற்றுச் சென்றனர்.

This slideshow requires JavaScript.

Filed under: kattankudy

Leave a comment

Pages

Front Page How to help Our News Vision and Mission Our Activities Volunteers programmers blood donation Emblem Contact us

E-mail us