இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் அனுசரனையுடன் இச்சங்கத்தின் காத்தான்குடிப் பிரிவினால் அல் அமீன் வித்தியாலய உயர்தர மாணவிகளுக்கு இரு தினங்களாக நடாத்தப்பட்ட முதலுதவி பயிற்சி வகுப்பின் இறுதி வைபவம் 25.09.2011 ம் திகதி மாலை காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் உபதலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அப்துல்லாஹ், காத்தான்குடிப் பிரிவின் தலைவர் சகோதரர் எம்.எஸ். றாபி, அல் அமீன் வித்தியாலய அதிபர் எம்.எம். கலாவுதீன் உட்பட இலங்கை செஞ்சிலுவைச்சங்க அதிகாரிகளும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
இதன் போது முதலுதவி பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கும், மற்றும் காத்தான்குடி அல் அமீன் வித்தியாலய அதிபருக்கும் முதலுதவி பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
Filed under: kattankudy